Monday, October 27, 2014

சாலுக்கிய வம்சம்...





பாதாமி , பட்டாடக்கல்லு , அய்ஹோலே..(BADAMI,PATTADAKKAL,, AIHOLE)










கர்நாடக மாநிலம் முழுக்கவே பல்வேறு சிற்பக்கலைகள் ,குகைகள் கொண்ட கோவில்கள் மிக அதிகம்.. இதில் சாலுக்கிய மன்னர்கள்களின் ராஜ்ஜியத்தின் தலைநகரமான பாதாமி , பட்டாடக்கல்லு , அய்ஹோலே போன்ற ஊர்கள் மிக அருமை..இதில் சிறப்பு என்னவென்றால் இது 5 முதல்-8ம் நூற்றாண்டுகளில் வம்சாவளிகளாக கட்டப்பட்டதாகும்..

முதலில் நாங்கள் சென்ற பாதாமி(பதாமி) ஐ பார்ப்போம்..

திராவிடர் கலை நுட்பத்துடன் கட்டப்பட்ட குகை கோவில்கள் கொண்ட நகரம்.. இந்த சிறு நகரம் முழுக்க பாதாம் நிறத்தில்( கரடுமுரடான standstone பாறைகள் நிறைந்து இருப்பதால் இந்த ஊருக்கு பாதாமி என்று பெயர் வந்ததாக கூறுகிறார்கள்..பதாமி என்றும் கூறுகிறார்கள்..

இந்த குகை கோவில் சிற்பங்கள், சாலுக்கிய மன்னன், புலிகேசி -1 கி.பி.543ம் ஆண்டு பாதாமிக்கு தலைநகரத்தை மாற்றிய போதிலிருந்து அமைக்கப்பட்டுள்ளன.. இந்த குகை கோவில்களை அவர்கள் உருவாக்கியது, இயற்கையாகவே தென்னகத்தில் இருந்த படை எடுத்து வந்த பல்லவ நாட்டு எதிரிகளிடம் இருந்து காத்து கொள்ள அமைந்தது சிறப்பாகும்..

மிகப்பெரிய  sandstone மலையை ,மிக எளிய பொருட்களை கொண்டு குடைந்து சிற்பங்களை அமைத்துள்ளது மிக அற்புதம்..இதில் standstone என்பது சற்று sensitive ஆன கற்களாகும்.. இதை சற்று வேகமாகவோ,தவறாகவோ செதுக்கினால்,கல் இரண்டாக உடைந்து போக வாய்ப்புகள் அதிகம்.. இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் அங்கிருக்கும் சிற்பங்கள் , தூண்கள் மற்றும் குடைந்தெடுத்த குகைக்குள் அமைக்கப்பட்டிருப்பது மிக அழகு.. மொத்தம் 4 குகை கோவில்கள் அருகருகே இருக்கின்றது.. இதில் மேல் ஏறுவது சிரமம் ஏதுமில்லை..ஆபத்தும் இல்லை.. யார் வேண்டுமானாலும் சென்று வரலாம்..

கீழே ஒரு அகஸ்த்தியர் தீர்த்தக்குளமும் , அதில் பழங்கால புத்தநாதர் கோவிலும் அமைந்திருக்கின்றன.. இதை மேலிருந்து பார்த்தால்,பச்சை நிற குளத்தில் இருப்பது மிக அழகாக இருக்கின்றது..

குகைக்கு மேலே 18ம் நூற்றாண்டுகளில் திப்பு சுல்தான் அமைத்த கோட்டை இருக்கின்றது..ஆனால் மேலே சென்று வருவது சிரமம் என்பதால் நாங்கள் செல்லவில்லை..

இந்த ஊருக்குள் நுழையும் போதே அங்கிருக்கும் பிரம்மாண்ட பாறைகள் , சந்து சந்தாக குறுகிய பாதைகள் கொண்ட தெருக்கள் , மிக பழமையான வீடுகள் , தொழில்நுட்பங்கள் பெரிதாக இல்லாத பழங்கால கிராம வாழ்க்கை , இவற்றையெல்லாம் பார்க்கும் போது நமது எண்ணங்கள் , கற்பனைகள் பின்னோக்கி  பயனிக்கும் என்பதில் சந்தேகமில்லை..


தகவல்கள்:

நாங்கள் சுற்றி பார்த்த வரையில் ரோடுகள் இந்த ஏரியாவை பொறுத்தவரையில் மோசமே.. எங்கேயும் வழிகாட்டிகள் கிடையாது.. சுற்றியும் 1960 களில் பார்ப்பது போன்ற பழைய கிராமங்களே இருக்கின்றன..நாங்கள் பாதாமிக்கு வந்து சேர இருட்டி விட்டது , கிட்டதட்ட 20-30kmக்கு ஆள் நடமாட்டமே இல்லை.. பயணமும் சற்று த்ரில்லிங்காக இருந்தது..

அங்கிருக்கும் கிராம மக்களும் பழமை மாறாமல் மராத்தி மக்களை போல் உடை அனிந்து இருக்கின்றனர்..அங்கே மராட்டி மொழியே அதிகம் பேசப்படுகின்றது...இவை அனைத்தும் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது..

பதாமி நகரத்தை தவிர எங்கேயும் பெரிய வீடு என்று ஒன்று கூட இல்லை..அனைத்தும் சிறிய வீடுகளே..தொழில்கள் எதுவும் சிறப்பாக இருப்பதாக தெரியவில்லை , விவசாயம்(வெங்காயம் , கம்பு , சோளம் , ராகி, செவ்வந்தி பூ), எருமை மாடு மேய்பது மட்டுமே அதிகம் தெரிந்தது..

கோவில்,குகைகளை அரசாங்கம் சுத்தமாகவே வைத்துள்ளது.. இருந்தாலும் செல்லும் வழியெல்லாம் மிகக்குறுகிய ரோடுகள் , அசுத்தமானவையாக இருக்கின்றன..

இந்த மூன்று ஊர்களையும் ஒரே நாளில் பார்த்து முடிக்கலாம்.. சிற்பக்கலை , வரலாற்றில் விருப்பம் அதிகம் இருப்பவர்கள் கண்டிப்பாக ஒரு நாள் தங்கியிருந்து பார்க்கலாம்..

இந்த ஊர்கள் 30 கி.மி. சுற்றலவில் இருக்கின்றன..

இந்த ஊர்களுக்கு செல்லும் போது பதாமி யில் மட்டுமே தங்க முடியும்.. மற்ற இரண்டு ஊர்களில் எந்த வசதியும் இல்லை... உணவகங்கள் கூட பதாமியில் மட்டும் தான் உள்ளது.. மற்றபடி ஏதாவது தேவையென்றால் பதாமியிலேயே வாங்கிக்கவும்.. இல்லையென்றால் சிரமம் தான்..

விடுதிகளை பொறுத்தவரையில் இரண்டு மூன்று சுமாரானவை இருக்கின்றன.. ஒரு சில பெரிய ஹோட்டல்களும் இருக்கின்றன..ஆனால்,அவைகள் சற்று outer ல் உள்ளாதால் முடிந்தளவு நேரமாகவே சென்று விடுவது நல்லது..

இந்த இடங்களுக்கு சென்று வர நினைப்பவர்கள் கூடவே hampi ஐயும் வரும் போது பார்த்துவிட்டு வருவது சிறந்தது..

இந்த இடங்கள பெங்களூருவிலிருந்து வடக்கே 513 கி.மி.கள் வரும்.. பதாமியிலிருந்து ஹம்பிக்கு(பெங்களூர் வழி) கிட்டதட்ட 120 கி.மி. வரும்..

பெங்களூரிலிருந்து ஒரு ரயில் பதாமிக்கு செல்கிறது.( golgumbaz express)

இவ்விடங்களை வாகனங்கள் இருந்தால் நாமே சென்று பார்த்து வரலாம்.. இருந்தாலும் கைடுகள் வைத்துக்கொள்வது சிறந்தது..

இங்கே கொசுக்களை விட கோவில்களே அதிகம்..





பாதாமி செல்லும் வழியில் எடுத்த படங்கள்... 





(நாக்கு வெளியே தள்ளும் மாடுகள்)




அந்த ஏரியா முழுக்கவே ஆடு , மாடு மேய்பவர்கள் மிக அதிகம்..








 மாட்டு வண்டிகளும் பரவலாக அதிகம்






மேரி கோல்டு , செவ்வந்தி ,போன்ற மலர்கள் அதிகம் பயிரடப்பட்டிருக்கின்றன்







இரவில் பஸ் இல்லாத கிராமத்தில் இருந்து பதாமிக்கு ஒன்றாக அடைந்து செல்லும் மக்கள்


கிட்டதட்ட 20-30 kilometerக்கு ஆள் நடமாட்டமில்லாத ரோடு..



பதாமி நகரம் சுற்றிலும் பாறைகள்,மலைகள் , கோவில்கள்



பதாமி முதல் குகை




குகைக்கு மேலே திப்பு சுல்தான் கட்டிய கோட்டை..







பெரிய தூண்களில் உள்ள சிற்பங்கள்










குகைக்குள் இருந்து எடுத்த படம்


மூன்றாம் குகைக்கு செல்லும்  வழி..



பதாமி நகரத்தின் MONKEY`s EYE VIEW











பாதாம் நிறத்தில் பாறைகள்






அந்த காலத்தில் விளையாடிய பல்லாங்குழி, கல்லிலேயே அமைத்துள்ளனர்..













மிக குறுகிய தெருக்கள்.. குறுக்கே வண்டிய போட்டால் எப்படி போவது?



அகஸ்த்தியர் தீர்த்த குளமும் , கோவிலும்..















பதாமி தெருக்கள்





பதாமி குகை முழுவதும் குரங்குகள் ஆதிக்கம்.. ஒரு போட்டோ எடுக்க நான் பட்ட பாடு..








பட்டாடக்கல்லு(PATTADAKKAL)..

அடுத்து நாங்கள் சென்றது `பட்டாடக்கல்லு`...

இது பதாமியிலிருந்து 18 k.m. தூரத்தில் இருக்கின்றது.. `பட்டாபிஷேக கல்என்பதையே பட்டாடக்கல்லு என்றழைக்கப்படுகின்றது..

இங்கே தான் அரசர்களுக்கு பட்டாபிஷேக, முடி சூட்டு விழா நடந்திருப்பதால் இந்த பெயர் அமைந்ததாக கூறுகிறார்கள்..

இங்கே ஒரே இடத்தில் 8 கோவில்கள் அமைந்துள்ளன..

பதாமியில் உள்ள சிற்பக்கலையை போல, அவர்களுக்கு அடுத்து வந்த அரச தலைமுறைகள், எப்படி புதுமையை புகுத்தியிருக்கின்றார்கள் என்பதற்கு இந்த கோவில்களே சான்று.. இந்த கோவில்கள் தென்னிந்திய திராவிட முறையிலும் , வட இந்திய நகரர் முறையிலும் அமைக்கப்பட்டிருக்கின்றது..

இந்த கோவிலை சாலுக்கிய மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்யனின் மனைவிகள் இருவரும் (சகோதரிகள்) சேர்ந்து கி.பி 745ல்போரில் வெற்றி பெற்றதற்கு கெளரவிப்பதற்காக கட்டியதாக கூறுகின்றனர்..

இந்த இடம் பதாமியை விட வேறுபட்டு அமைந்திருந்தது.. ஒரு பக்கம் நமது கோவில் கோபுரங்களை போலவும் , மறு பக்கம் ஒரிசாவில் உள்ள கோவிலகளை போலவும் ஒரு சேர அமைந்திருந்தது மிக அழகாக இருந்தது..

உறுதியான தூண்களும் , அதில் அமைந்திருக்கின்ற சிற்பங்கள் ராமாயண , மகாபாரத புராணங்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவும் உயிரோட்டமாக இருந்திருப்பதை பார்க்கலாம்.

மற்றொரு தூணில்ஒரு பெண் தனது காதலனுக்கு கடிதம் எழுதியதற்காக யானையின் காலடியில் தூக்கி வீசியெறிப்பட்ட சம்பவத்தையும் வடிவமைத்துள்ளனர்..

அதே சமயம்,  கன்னட மொழியின் எழுத்து வடிவிலும் சுவர்களில் செதுக்கியுள்ளனர்..அதில் போர் காலங்களில் இக்கோவில்கள் கட்டப்பட்டதற்காக சன்மானங்களாக தரப்பட்ட தாசிகளை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன..

இவற்றை பார்க்கும் போது , அந்தக்காலங்களில் கலையும் , மூர்க்கத்தனங்களும் ஒரு சேர அமைந்திருப்பதை சிற்பங்களின் மூலம் அறியலாம்..

அவர்கள் கட்டிய கோவிலுக்கு முன்னே மிகப்பெரிய நந்தி சிலை ஒன்று கருப்பு கிரானைட் கல்லில் உள்ளது... பல படையெடுப்புகள்,கொள்ளைகளுக்கு பிறகு இன்னமும் பளபளப்பாக அழகாக இருப்பது இந்த நந்தி சிலையின் சிறப்பு...

தகவல்கள்:

1. பட்டாடக்கல்லு ஒரு UNESCO world heritage site ஆகும்..

2. இது பதாமிக்கும் , அய்ஹோலேவுக்கும் நடுவில் இருக்கின்றது..

3. இது முழுக்க முழுக்க கிராமத்தில் அமைந்திருக்கின்றது.. இங்கு தங்குவதற்க்கோ , வாங்குவதற்கோ ஒன்றும் இல்லை..ஆனால் மிக அழகாக பராமரிக்கின்றார்கள்..


பட்டாடாக்கல்லு படங்கள்:


விவசாயி..










எங்கே செல்லும் இந்த பாதை?? வழிகாட்டி இல்லாமல் தடுமாறிய போது..


அப்பாடா ஒருத்தர் வர்றார்.. அவரை கேட்போம்..


வட இந்திய `நகர` அமைப்பில் கோபுரம்..



தென் இந்தியாவின் `திராவிட` மற்றும் வட இந்திய `நகர` அமைப்பில் கோபுரங்கள்


கற்களின் வண்ணங்கள் மிக அழகு..





6ம் நூற்றாண்டிலிருந்து இன்னமும் பளபளக்கும் பெரிய `கிரானைட்` நந்தி சிலை..









சிதிலமடைந்த நந்தி சிலை..






ஒவ்வொரு தூண்களிலும் கதை சொல்லும் அருமையான சிற்பங்கள்



ஒரு கையுடன் பட்ங்களை வரையும் நபர்..





 









மிரட்டும் பஸ் மற்றும் ரோடு..


டேய்...யாருகிட்ட போட்டோ புடிக்கிற..


பழங்காலத்து வீடுகள் மட்டுமே அங்கே இருப்பதும் அருமை..









பாதாமியை விட்டால் மற்ற ஊர்களில் இந்த மாதிரி தான் சாப்பாடு.. ரெடியா?

தம்பி.. காரம் கொஞ்சம் கம்மியா போட்டுட்ட..



 அய்ஹோலே(AIHOLE):

அடுத்து நாங்கள் சென்றது அய்ஹோலே.. இது பட்டாடக்கல்லிலிருந்து 20km வரும்.. இதுவும் கிராமங்களிலேயே அமைந்திருக்கின்றன..

இது சாலுக்கிய மன்னர்களின் முதல் தலைநகரமாகும்..அதற்கு சான்றாக இந்த ஊரை சுற்றியும் 100க்கும் மேற்பட்ட கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன..

பதாமி , மற்றும் பட்டாடக்கல்லு ஆகியவற்றை பார்த்த பிறகு மீண்டும் அதே மாதிரியான கோவில் சிற்பங்களை திகட்டும் அளவுக்கு ஒரே நாளில் பார்த்ததால் சற்று சலிப்பாக போய்விட்டது.. இருந்தாலும் பார்க்காமல் போக கூடாது என்பதற்காக ஒரே முடிவாக இதையும் பார்த்துவிடுவோம் என்று சென்றடைந்தோம்..

அங்கே 100 கோவில்களெல்லாம பார்க்க முடியாது என்பதால் முக்கியமான அங்கே உள்ள துர்கா கோவிலை மட்டும் பார்க்க சென்றோம்.. இந்த கோவில் சிறியதாக இருந்தாலும் , இதன் வடிவம் அரை வட்ட வடிவமாக(semi circular shape) இருந்தது அழகு.. இந்த கோவிலில் உள்ளே கற்கலாலேயே மேல் தூண்களும் , மேல் சுவற்றில் உள்ள கற்சிற்பங்களும் அழகு..



ஒரு பழங்குடி இனத்து மூதாட்டி..


செல்லும் வழியில்










மேற்கூறையில் உள்ள தூண்களில் அமைந்த சிற்பங்கள்..








இங்கே ஜன்னல் கூட கற்களில்,சிற்பங்களும் தான்..




ஃபேஸ்புக் ,ட்விட்டர் இண்டர்நெட் இல்லாமல் சந்தோசமாக குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் ஒரு விவசாய குடும்பம்..






ஆடு மாதிரியே இருக்கும் மாடுகள்..


பள்ளிக்கு சென்றாலும் கடமையை செய்வோம் நாங்கள்..



சிதிலமடைந்த வீடுகள் இங்கே அதிகம் காணப்படுகின்றன..

இங்கே கிட்டதட்ட அனைத்து வீடுகளிலும் மாடு வளர்ப்பு உண்டு..அதை தாண்டி தான் வீட்டுக்குள் செல்ல முடியும்..


கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஒன்றுமில்லை..


மதிய உறக்கம்..





பழங்காலத்து கதவுகள் கொண்ட கடைகள்..













இதற்கு மேல் சற்று நேரம் ஆகிவிட்டதால் முந்தைய நாள் இரவு கொடுத்த அனுபவம் காரணமாக நேரமாக ஹம்பி செல்வதற்காக நீங்கா நினைவுகளுடன் ஹம்பிக்கு கிளம்பினோம்..

அன்புடன்
சுரேஷ் பாபு , சரவணமூர்த்தி..
(ஈரோடு)

8 comments:

  1. Super மாப்பிள்ளை

    ReplyDelete
  2. அட்டகாசம்ணா :-)

    ReplyDelete
  3. ENJOY............ NICE...............SUPER..........

    ReplyDelete
  4. Great Bro,

    Many People in this World Doesn't Know About These Relics of Ancient Tamil Kings...

    ReplyDelete
  5. ஐயா அருமை நன்றீ

    ReplyDelete
  6. அருமையான பயணம் ,நன்றி

    ReplyDelete
  7. புகைப்படங்களுடன் விளக்கம் கொடுத்தது அருமை

    ReplyDelete